மோடி அரசுக்கு அம்பேத்கரை பற்றி பேச அருகதை இல்லை.. வைகோ ஆவேசம்
மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலைக்கு இன்று அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Recommended Video

மதுரை: அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலைக்கு இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் மோடி அரசுக்கு அம்பேத்கரை பற்றி பேச அருகதை இல்லை என ஆவேசமாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ உலகத்தின் தலை சிறந்த அரசியல் சட்டங்களை எல்லாம் ஆய்வு செய்து, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றினார் அம்பேத்கர். மனு தர்ம சாஸ்திரம் ஒழிய வேண்டும் என அருமையான புத்தகம் எழுதினார்.

அம்பேத்கருக்கு நிகரான சட்ட மேதை யாரும் கிடையாது
இந்து மதம் மிகவும் கொடுமையானது என முடிவு செய்து, நாகபுரியில் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தை தழுவினார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அவர்களுக்காகப் போராடினார்.
அம்பேத்கர் படத்தை மைய மண்டபத்தில் எனது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தில் வி.பி.சிங் திறந்து வைத்தார். டாக்டர் அம்பேத்கர் பெரியாரை நேசித்தார். பெரியார் டாக்டர் அம்பேத்கரை நேசித்தார்.
இன்று ஒரு மதம், ஒரு மொழி என இந்துத்துவா கொள்கையைத் திணிக்க முயற்சிக்கும் மோடி அரசுக்கு டாக்டர் அம்பேத்கரைப் பற்றிப் பேச அருகதை கிடையாது.அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவில் சாதி சாயம் பூச மத்திய மோடி அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications