தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி பரிஷத் உதவி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி பரிஷத் பேரவையினர் நிவாரணப்பொருட்கள் வழங்கினர்.

சென்னை, கடலூரைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு மோடி பரிஷத் பேரவை சார்பில் குடிநீர், உடைகள், போர்வை, பாத்திரங்கள், பிஸ்கட், மருந்து-மாத்திரைகள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

Modi parishad distributes flood relief to Tuticorin people

மழைவெள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்விற்கு மோடி பரிஷத் பேரவை தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், தென்தமிழக மாநில அமைப்பு செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம், முத்தம்மாள் காலனி, அய்யப்பன் நகர், ராம் நகர், அம்பேத்கார் நகர், சுந்தரவேல்புரம், பூப்பாண்டியாபுரம், முல்லை நகர், ஹவுசிங் போர்டு காலனி, சத்யா நகர், முத்தையாபுரம், சோரீஸ்புரம், காலாங்கரை உட்பட மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி பொதுமக்களுக்கு நேரில் சென்று மழைவெள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதுபோன்று லாரிகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+