மோடி அறிவிப்பு சிக்கனையும் விட்டு வைக்கவில்லை.. நாட்டு கோழி விலை விர்.. அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
மோடியின் பணம் குறித்த அறிவிப்பு, நெல்லை மாவட்டத்தில் நாட்டுக்கோழி விலை உயரும் அளவுக்கு கொண்டு சென்று விட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
நெல்லை: நாட்டு கோழி விலை அதிகரித்துள்ளதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் நாட்டு கோழி வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் அங்கு கொண்டு வரப்படும் நாட்டு கோழிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
கடந்த வாரம் வரை ஒரு கிலோ நாட்டு கோழி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பணப் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் சரிவர சம்பளம் கிடைக்காததால் பெண்கள் வீட்டில் வளர்த்து வந்த ஆடு, கோழிகளை விற்பனை செய்தனர்.
இதனால் கோழிகளுக்கு இப்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் நாட்டு கோழி வரத்து சந்தைக்கு குறைந்தது.

நாட்டு கோழி வரத்து குறைவு
கடந்த இரண்டு மாதங்களுககு முன்பு வரை தினமும் சராசரியாக 1000 நாட்டு கோழிகள் வரை சந்தைக்கு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 100 முதல் 150 வரை மட்டுமே நாட்டு கோழிகள் சந்தைக்கு வருவதாக கூறப்படுகிறது.

வெளியூர்களுக்கு செல்கிறது
தற்போது இங்கிருந்து சந்தைக்கு கொண்டு செல்லப்படும் கோழிகளை திருப்பூர், கரூர், சேலம் வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். சேவல் கோழி கிலோ ரூ.350க்கும், முட்டையிடும் கோழிகள் ரூ.400க்கும் வாங்குகின்றனர்.

குஞ்சுகள் பொறிக்கவில்லை
கோவில்பட்டி, தூத்துககுடி, பாளையங்கோட்டை வியாபாரிகளும் முட்டையிடும் கோழிகளை ரூ.400 கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் உள்ளூர் சந்தையிலும் இதே விலை உயர்வு உள்லதாக கூறப்படுகிறது. ஆலங்குளம் பகுதியில் நாட்டு முட்டைகள் ரூ.12க்கு விற்கப்படுவதால் அதை பொறிக்க வைத்து குஞ்சுகளை உருவாக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

பண மதிப்பு அறிவிப்பு
மோடியின் பணம் குறித்த அறிவிப்பு, நெல்லை மாவட்டத்தில் நாட்டுக்கோழி விலை உயரும் அளவுக்கு கொண்டு சென்று விட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications