இளமைக்கால இஸ்லாமிய நண்பரின் மனைவி இறந்தது குறித்து துக்கம் விசாரித்த மோடி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் செய்திகள் மட்டும் போடுவதில்லை. அதை எப்படி சின்சியராக பாலோ செய்கிறார் என்பதற்கு இந்த டிவிட்டர் செய்திப் பரிமாற்றம் ஒரு உதாரணம்.
மோடியின் இளம் பிராயத்து நண்பர் குதுப். இவரும், இவரது மனைவியும் விபத்தில் சிக்கிக் கொண்டனர். அதில் குதுப்பின் மனைவி இறந்து விட்டார். குதுப் காயமடைந்தார்.
@narendramodi Sir, R u aware ur ch hud Bohra friend Kutub's wife died in a ghastly road accident y'day? He is injured 2. They hv 4 daughters
— Rasheeda Bhagat (@rushbl) December 16, 2014
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரஷீதா பகத் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி போட்டிருந்தார். அதில், நரேந்திர மோடி சார், உங்களது இளம் பிராயத்து நண்பர் குதுப்பின் மனை்வி விபத்தில் இறந்து விட்டார். தெரியுமா?. குதுப்பும் காயமடைந்துள்ளார். அவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர் என்று போட்டிருந்தார் பகத்.
Thanks @rushbl, I saw your Tweet on the death of my childhood friend Qutub's wife. After that I spoke to him & offered my condolences.
— Narendra Modi (@narendramodi) December 21, 2014
இதற்கு பதிலளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதில், நன்றி ரஷீதா பகத். உங்களது டிவிட்டைப் பார்த்தேன். அதன் பின்னர்தான் நான் குதுப்பிடம் பேசினேன். எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டேன் என்று மோடி கூறியுள்ளார்.