வானிலை அப்டேட்: இன்று முதல் தமிழகத்தில் கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை!
வட மாநிலங்களை தொடர்ந்து தற்போது இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Recommended Video

சென்னை: வட மாநிலங்களை தொடர்ந்து தற்போது இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மும்பை, தானே நகரங்களில் கடந்த வாரம் முழுக்க முழுக்க மழை கொட்டி தீர்த்தது. கடந்த 2 நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்தது. இந்தநிலையில் தற்போது கோவா, மஹராஷ்டிரா, புனே, டெல்லி ஆகிய பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறைந்தது. இனி தென்மேற்கு பருவ மழையின் வீரியம் அவ்வளவாக இருக்காது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் வட மாநிலங்களை தொடர்ந்து தற்போது இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல இன்று கனமழை பெய்ய வாய்ப்பு. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் முழுக்க மழை பெய்யும். தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் குளிர்ச்சியாக வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த வானிலை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிலும் மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்க கடலில் ஏற்படும் பருவநிலையை பொருத்து, மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications