திராவிட கட்சிகள் ஆட்சி மீது முக்கால்வாசி மக்களுக்கு அதிருப்தியில்லை: புதிய தலைமுறை கருத்து கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து மக்களின் நாடிக்கணிப்பு 2016 என்று மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியுள்ளன.
திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் என்று கேட்ட கேள்விக்கு 1-4 மதிப்பெண்- 16.87%; 5-7 மதிப்பெண்- 53.29%; 8-10 மதிப்பெண்- 23.40% கொடுத்துள்ளனர்.

இதில் பூஜ்யம் மதிப்பெண் கொடுத்தோர் 1.46% பேர் ஆகும். இதில் மதிப்பெண் அளித்ததில் சுமார் முக்கால் சதவீதம்பேர் திராவிட ஆட்சிக்கு 5க்கு மேல்தான் மதிப்பெண் கொடுத்துள்ளார்கள். இதன்மூலம், அதிக மக்கள் திராவிட ஆட்சி முறையால் பாதிக்கப்படவில்லை, அதை வெறுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
திராவிட ஆட்சி முறைக்கும், அவ்விரு கட்சிகளுக்கும் எதிராகவும் பெரும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த தேர்தலில் இந்த விவரம் முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications