சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலையோர உணவகங்களால் விபத்துகள் அதிகரிப்பு
சென்னை: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் பெருகி வரும் சாலையோர உணவகங்களால், விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 4, சென்னை-பெங்களூர் ஆகிய இரு பெரும் நகரங்களை இணைக்கிறது. இவ்விரு நகரங்கள் நடுவே, ஒசூர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. எனவே இவ்விரு நகரங்களுக்கு இடையே, பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்தும் அதிக அளவில் நடக்கிறது.

அடிக்கடி விபத்துகள்
குறிப்பாக சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தொட்டுச் செல்லும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் முக்கிய சந்திப்புகளான காஞ்சிபுரம், திருப்புட்குழி, பாலுச்செட்டிசத்திரம், பொன்னேரிக்கரை, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட், நசரத்பேட்டை உள்ளிட்ட சந்திப்புப் பகுதிகளில் நாள்தோறும் குறைந்தது 5 விபத்துகள் வரை நடைபெறுவதாக காவல்துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கொத்தாக பறிபோகும் உயிர்கள்
இதனால் மாதந்தோறும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. சில நேரங்களில் பஸ்கள் விபத்தில் சிக்கும்போது, ஓரே நேரத்தில் பலர் கொத்து கொத்தாக உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

உணவகங்கள் காரணம்
முக்கிய சாலை சந்திப்புப் பகுதிகளில் ஊருக்குள் இருந்து வருபவர்களின் கவனக்குறைவே இதற்கெல்லாம் காரணமாக உள்ளது. இதைவிட முக்கியமாக, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் சாலையோர உணவகங்கள் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாலையில் வாகன நிறுத்தம்
சாலையோரத்தில் உணவகங்கள் அமைப்பவர்கள் சர்வீஸ் ரோடு இல்லாத பகுதிகளில்தான் பெரும்பாலும் கடை அமைத்துள்ளனர். இதனால் இந்தச் சாலையில் செல்லும் சரக்கு வாகனங்களை அவரவர் இஷ்டத்துக்கு சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விடுகின்றனர்.

பின்னால் வரும் வாகனங்கள் மோதல்
தேசிய நெடுஞ்சாலையில் வருகிறோம் என்ற எண்ணத்தில், அதிவேகமாக வரும் பிற வாகன ஓட்டுநர்கள் முன்னே நிறுத்தப்பட்டிருக்கும் சரக்கு வாகனங்களின் நிலை குறித்து அறிவதற்கு முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்களில் மோதி, பயங்கர விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

மருத்துவ சிகிச்சைக்கு வழியில்லை
அவ்வாறு விபத்து ஏற்பட்டாலும், முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க சென்னைக்கோ, வேலூருக்கோ, பெங்களூருக்கோதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உயிர் இழப்பைத் தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. விலை மதிப்பில்லாத மனித உயிர்களைக் காக்கும் வகையில் சாலையோர உணவகங்களை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது விற்பனையுமா..?
ஒரு சில சாலையோர உணவகங்களில் மது விற்பனையும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனாலேயே சில லாரி ஓட்டுநர்கள் இந்த உணவகங்களில் சாப்பிடுவதற்கு வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர உணவகங்களை அகற்றினாலே விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications