சென்னை தீம் பார்க் ராட்டினத்தில் இருந்து விழுந்து பெண் சாவு.. தாய்க்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
சென்னை: சென்னை பொழுது போக்கு பூங்காவில் ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், பூங்கா உரிமையாளர், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளார்.
சென்னை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி. பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ‘ஆக்டோபஸ்' என்ற ராட்டினத்தில் சுற்றும்போது, நாகலாந்தை சேர்ந்த அபியா மேக் (20) என்ற விமானப் பணிப் பெண் கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். தனது தோழிகளுடன் விடுமுறையை கொண்டாட அந்த பூங்காவுக்கு சென்றபோது இச்சம்பவம் நடந்தது.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பொழுதுபோக்கு பூங்காவின் உரிமையாளர் ஈ.வி.பெருமாள் ரெட்டியை அதே மாதம் 20ம் தேதி கைது செய்தனர். அவரின் மனைவி ராஜேஸ்வரி, மகன் சந்தோஷ் ரெட்டி உள்பட பலர் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை ஹைகோர்ட்டில் இவ்வழக்கு நடைபெறும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ், இந்தசம்பவம் தொழில்நுட்ப கோளாறால் நடந்தது என்பதால், பூங்காவின் உரிமையாளர் வேண்டுமென்றே இச்செயலை செய்ததாக கூற முடியாது என்று வாதிட்டார். மேலும், இறந்தவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தரவும் தயாராக இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தார்.
அபியா மேக் வருமானத்தை நம்பிதான், அவரது குடும்பம் இருந்தது என்பதால், ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாசுகி ரமணன் கேட்டார். இதையடுத்து ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான காசோலை, அபியா மேக்கின் தாயார் சசுலே மேக்கிடம் வழங்கப்பட்டது.
மாநில நுகர்வோர் ஃபோரத்திலும், இவ்வழக்கு பெண்டிங்கில் இருப்பதை சுட்டிக்காட்டிய கோர்ட், ஒருவேளை, நுகர்வோர் ஃபோரம், இதைவிட கூடுதல் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டால், பொழுதுபோக்கு பூங்கா, கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், இதைவிட குறைவான இழப்பீடு தர உத்தரவு வந்தால், பாதிக்கப்பட்டவர் தரப்பு, பணத்தை திருப்பி தர அவசியம் இல்லை என்றும் கோர்ட் கூறியது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications