மறக்க முடியாத மவுலிவாக்கம்...!
சென்னை: மவுலிவாக்கம்.. அதி வேகமாக வளர்ந்து வரும் சென்னைப் புறநகர்ப் பகுதி. 2014ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி இரவு இந்த பகுதி தமிழகத்தையே உலுக்கி எழ வைத்து விட்டது. பேய் மழையில் சிக்கி இங்கு கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டு போனது.
3 நாட்களுக்கும் மேலாக நீடித்த மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் இறுதியில் மொத்தம் 61 பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.
அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மீது மோகம் கொண்டவர்களை திடுக்கிட வைத்த பயங்கர சம்பவம் இது.. இன்று மவுலிவாக்கம் துயரச் சம்பவம் நடந்து 2 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.. இன்றுதான் இடிந்த கட்டடத்தின் அருகே உள்ள இன்னொரு 11 மாடிக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மறக்க முடியாத மவுலிவாக்கம் சம்பவம் குறித்த ஒரு "பிளாஷ்பேக்"..
சென்னை: கனமழையில் 11 மாடி கட்டிடம் இடிந்து புதையுண்டது - 11 பேர் பலி- 40 பேர் கதி என்ன?
இடி' தான் விபத்திற்குக் காரணம்... நாங்கள் பொறுப்பல்ல: கட்டுமான நிறுவனம் ‘திமிர்' விளக்கம்
இடி விழுந்தால் மேல் பகுதிதானே இடியும்.. அஸ்திவாரம் உடையாதே.. விஜயகாந்த்
கட்டிட விபத்துக்கு காரணமானவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. ஜெ. உறுதி
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர் செல்போனில் கதறிய பரிதாபம்..!
11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் சேதமாகிப் போன 30 அப்பாவி வீடுகள்!
என்ன அநியாயம்... ஏரிக் கால்வாய்க்கு அருகில் 11 மாடி கட்ட அனுமதி!
என்னைக் காப்பாத்திட்டு மொத்தமா போயிட்டாங்களே: கதறும் ஆந்திர மாநில தொழிலாளி
சென்னை கட்டிட விபத்து... இடிந்த கட்டிடத்திற்கு அருகிலிருந்த 11 மாடி கட்டிடத்திற்கு சீல்!
யாராவது உள்ளே இருக்கீங்களா...? கட்டிட இடிபாடுகளுக்குள் 3 மொழிகளில் குரல் எழுப்பும் மீட்பு குழுவினர்!
3 நாட்கள் சிறுநீரைக் குடித்து வாழ்ந்தேன்... மறுபிறவி பெற்றேன்.. கண் தானம் செய்ய ஒடிசா வாலிபர் முடிவு
சென்னை கட்டட விபத்துக்கு யார் காரணம்?.. விசாரணைக் கமிஷன் அமைத்து ஜெ. உத்தரவு
சென்னைக் கட்டிட விபத்து: 11 பேரை உயிருடன் மீட்க உதவிய ஜாக், ஜூலி, ஜான்சி, ஜீனா...
சென்னை கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு- 61 ஆனது
மவுலிவாக்கம் மீட்புப்பணிகள் நிறைவு: 61 பேர் பலி; 27 பேர் உயிருடன் மீட்பு