மறக்க முடியாத மவுலிவாக்கம்...!
சென்னை: மவுலிவாக்கம்.. அதி வேகமாக வளர்ந்து வரும் சென்னைப் புறநகர்ப் பகுதி. 2014ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி இரவு இந்த பகுதி தமிழகத்தையே உலுக்கி எழ வைத்து விட்டது. பேய் மழையில் சிக்கி இங்கு கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டு போனது.
3 நாட்களுக்கும் மேலாக நீடித்த மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் இறுதியில் மொத்தம் 61 பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.

அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மீது மோகம் கொண்டவர்களை திடுக்கிட வைத்த பயங்கர சம்பவம் இது.. இன்று மவுலிவாக்கம் துயரச் சம்பவம் நடந்து 2 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.. இன்றுதான் இடிந்த கட்டடத்தின் அருகே உள்ள இன்னொரு 11 மாடிக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மறக்க முடியாத மவுலிவாக்கம் சம்பவம் குறித்த ஒரு "பிளாஷ்பேக்"..












Click it and Unblock the Notifications