முல்லை பெரியாறு பகுதியில் வாகன பார்க்கிங் கூடாது.. தமிழக அரசு கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
சென்னை: முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியில் வாகன நிறுத்தத்தைக் கட்டுவதற்கு கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், கேரளாவைச் சேர்ந்த தங்கப்பன், ஆபிரகாம் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசும் இந்த வழக்கில் இணைந்துள்ளது.
அந்த இடம் தேக்கடி வனப்பகுதியில் வருகிறது என்றும் அங்கு ‘‘கார் பார்க்கிங்'' அமைத்தால், வனவிலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறைச் செயலாளர் தாக்கல் செய்த மனுவில், கார் பார்க்கிங் கட்ட தேர்வு செய்துள்ள இடம், தமிழக அரசுக்கு சொந்தமான வனப்பகுதி என்பதோடு, அந்த இடம் முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியாகவும் உள்ளது. எனவே சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்புவரக்கூடும் என்பதால் கார் பார்க்கிங் கட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கூடுதலாக 72 பக்க ஆதாரங்களை இன்று, தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் பார்க்கிங் கட்ட கூடாது என்பதை வலியுறுத்தும் வாதங்களுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications