முல்லை பெரியாறு அணை: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - ஞானதேசிகன்
சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"இந்த தீர்ப்பு தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி ஆக உயர்த்தலாம் என்றும், அணையின் பராமரிப்பை கேரள அரசுதான் மேற்கொள்ளும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை செல்லாது என்றும், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை இரு மாநில மக்களும் வெற்றி - தோல்வி ஆக கருதாமல் சுமூகமாக பரஸ்பர ஒத்துழைப் போடு கொண்டு செல்ல வேண்டும். இந்த வழக்கை சிறந்த முறையில் நடத்தியதற்காக தமிழக அரசுக்கும், வக்கீல்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில் இந்த தீர்ப்பின் மூலம் எனக்கொரு மகிழ்ச்சி உண்டு. ஏனெனில், முதன் முதலில் முல்லை பெரியாறு அணை வழக்கை அப்போதைய தேனி எம்.எல்.ஏ அழகர்ராஜா சார்பில் நான்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
கேரள மக்கள் இந்த தீர்ப்பால் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகாமல் வழி நடத்த வேண்டிய பொறுப்பு கேரள மாநில அரசுக்கு உள்ளது''என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications