காவிரியை கர்நாடகம் உரிமை கொண்டாட முடியாது என்ற தீர்ப்புக்கு முத்தரசன் வரவேற்பு
காவிரியை கர்நாடகம் உரிமை கொண்டாட முடியாது என்ற தீர்ப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
Recommended Video

கன்னியாகுமரி: காவிரி நதியை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்றார்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறுகையில், வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி மோடிக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பை பிரதமர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

உயர் பொறுப்பில் உள்ளவர்களின் தலையீடு இல்லாமல் வங்கியில் மிகப்பெரிய மோசடி நடைபெறாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குரியதாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஓ. பி.எஸ். பேச்சால் அதிமுகவை பிரதமரும் பிரதமர் அலுவலகமும் தான் இயக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. ரூ.9000 கோடி, 11000 கோடி என கொள்ளையடித்தவர்களை மோடி சர்க்கார் பாதுகாத்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications