For Daily Alerts
Just In
சென்னை ஹைகோர்ட் தலைமை பதிவாளராக என்.சதீஷ்குமார் நியமனம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக என். சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளராக இருந்த ரவீந்திரன் சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அந்த இடம் காலியானதையடுத்து என்.சதீஷ்குமார் தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல ஊழல் தடுப்பு பதிவாளராக பூர்ணிமாவும் நீதித்துறைப் பதிவாளராக ராஜமாணிக்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக நஷீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட சிறு வழக்கு நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதியாக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில சட்டத்துறை பயிற்சி மைய இயக்குநாக சந்திரசேகன் நியமிக்கப்பட்டுள்ளார்
Comments
English summary
N. Sathishkumar was appointed as a Chief Registrar of Chennai High court.
Story first published: Sunday, October 2, 2016, 17:24 [IST]