இன்னும் 6 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் – சீமான் அதிரடி அறிவிப்பு
திருச்சி: சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை இன்னும் 6 மாதத்தில் வெளியிடுவேன் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு ஞாயிற்றுக்கிழைமை மாலை நடைபெற்றது.

இம் மாநாட்டில் சீமான் பேசியதாவது:
இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய மக்கள் முதன்முதலாக இன உணர்வுடன் இங்கு கூடியுள்ளனர். மாற்று அரசியல் புரட்சியை முன்வைக்கிறோம்.
ஈழம் விடுதலை ஒன்று தான் வாழ்நாள் இலக்கு. தமிழ் தேசிய இனத்திற்கு என ஒரு தேசம். அதனை அடைவதற்கான தொடக்கம் தான் 2016 தேர்தல். தமிழர்களுக்கு என்று அதிகாரம் இல்லை. அதனால் தான் அன்டை நாட்டில் நமது மீனவர்கள், அன்டை மாநிலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
இலங்கையில் நடந்த இனஅழிப்பை திமுக, அதிமுக தடுக்கவில்லை. தமிழர்களை காக்கவில்லை.
தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆள்மாற்றம் நடக்கிறது. ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. ஊழல், லஞ்சம், பலாத்காரம், கொலை, கொள்ளை, தனியார் மயம், இவைகள் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லா அரசுகளுக்கும் பொதுவானது.
எனவே தான் தனித்து நிற்க முடிவேடுத்தோம். தேசிய அரசியல் கட்சிகளுடனும், திராவிட அரசியல் கட்சிகளுடனும் ஒருபோதும் கூட்டணி கிடையாது.
சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது திட்டமிட்ட இன படுகொலை நடத்தியது. இதனை கண்டித்து அதிமுக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
தனி ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தனி தமிழ் ஈழ சோசலிச குடியரசு அமையவேண்டும். தனி ஈழம் மட்டும் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றது.
2016 தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு. 234 தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அவர்களுடைய பட்டியல் இன்னும் 6 மாதங்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications