கங்கிராட்ஸ், கங்கிராட்ஸ்: சுந்தர் பிச்சையை வாழ்த்திய மோடி, நாதெல்லா, குக்
சென்னை: கூகுள் நிறுவன சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சைக்கு பிரதமர் மோடி, மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா, ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.
சுந்தருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
மோடி
வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை. கூகுளில் புதிய பொறுப்பை ஏற்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
டிம் குக்
பதவி உயர்வு பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை என்று ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் ட்விட்டர் மூலம் வாழ்த்தியுள்ளார்.
|
சத்யா நாதெல்லா
வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை. தகுதிக்கேற்ற பதவி என மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
எரிக் ஷ்மிட்
சுந்தரின் திறமையை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்... அவர் சிறந்த சிஇஓவாக இருப்பார் என ஆல்ஃபபெட் நிறுவன எக்சிகியூட்டிவ் சேர்மன் எரிக் ஷ்மிட் கூறியுள்ளார்.
|
சந்திரபாபு நாயுடு
கூகுள் நிறுவன சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் சுந்தர் பிள்ளை. இந்தியாவுக்கு பெருமையான தருணம் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தியுள்ளார்.
|
ஜெஃப் வீனர்
கூகுளின் புதிய சிஇஓ சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துக்கள். அந்த பதவிக்கு லாரி உங்களை விட சிறந்த நபரை தேர்வு செய்திருக்க முடியாது என லிங்க்ட்இன் நிறுவன சிஇஓ ஜெஃப் வீனர் வாழ்த்து கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications