சென்னை கட்டட விபத்தில் பலியான ஆந்திர தொழிலாளர்கள்: நாயுடு நிதியுதவி
சென்னை: சென்னையில் நடந்த கட்டட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், உயிரிழந்தவர்களுக்குத் தலா ரூ. 5 லட்சமும் அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் அம்மாநிலத்தை சேர்ந்த வீட்டுவசதித்துறை அமைச்சர் மிராலினியை விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிடுமாறு அவர் உத்தரவிட்டார்.
பலியான தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்தார்கள் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே நெல்லூர் மாவட்ட ஆட்சியர் பிரியதர்ஷனி தலைமையிலான குழு ஒன்று சென்னையில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு வருவதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications