நாஞ்சில் சம்பத்துக்கு மீண்டும் கிடைத்தது "மைக்"...!
சென்னை: நாஞ்சில் சம்பத்துக்கு, அதிமுக கூட்டங்களில் பேச தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தத் தடை நீங்கியுள்ளதாம்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் அதிமுக கூட்டங்களில் பேசவுள்ளார். முதலில் ஆவடியிலும், தொடர்ந்து தி.நகரிலும் அவர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களில் பேசவுள்ளார்.

தந்தி டிவிக்குக் கொடுத்த பேட்டியிலும், தொடர்ந்து புதிய தலைமுறைக்குக் கொடுத்த பேட்டியிலும் தெரிவித்த கருத்துக்களுக்காக கடும் கண்டனங்களைச் சம்பாதித்தார் நாஞ்சில் சம்பத். இதையடுத்து அவரிடமிருந்த கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவியைப் பிடுங்கினார் ஜெயலலிதா.
மேலும் அவர் அதிமுக கூட்டங்களில் பேசவும் தடை விதிக்கப்பட்டது. அவர் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாஞ்சில் சம்பத் அமைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் அதிமுக கூட்டங்களில் பேச அனுமதி கிடைத்துள்ளதாம். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று ஆவடியில் நடைபெறும் கூட்டத்தில் சம்பத் பேசவுள்ளார். அதேபோல 26ம் தேதி தி.நகரில் நடைபெறும் கூட்டத்திலும் அவர் பேசவுள்ளாராம்.
இருப்பினும் டிவி விவாத நிகழ்ச்சிகளில் மீண்டும் இவர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications