நாஞ்சில் சம்பத் திமுகவில் இணைகிறாரா?
சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் பரவிய நிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டே வெளியேறப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், அவர் திமுகவில் இணையப்போவதாக டிவி ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் சசிகலாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

பொதுவாக கட்சி சம்பந்தபட்ட விஷயங்களில் ஊடகங்களுக்கு முந்தி கருத்துச் சொல்லும் நாஞ்சில் சம்பத் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார். இதனால் அரசியலில் இருந்து நாஞ்சில் சம்பத் ஓய்வு பெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து அவரது மகள் மதிவதனி செய்தியாளர்களை சந்தித்து தனது தந்தை அரசியலில் இருந்து விலகுவதாக வரும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையப் போவதாக டிவி ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவில் இணைவது குறித்து பேசியதாகவும், அதற்காக தேதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications