For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலையில் குடங்களை போட்ட நரிக்குறவர்கள்.. வாயில் துணிகட்டி தண்ணீர் கேட்டு திருத்தணியில் "ஒப்பாரி"

Google Oneindia Tamil News

Recommended Video

    சாலையில் குடங்களை போட்டு நரிக்குறவர்கள் போராட்டம்-வீடியோ

    திருத்தணி: திருத்தணியில் குடிநீர் கேட்டு வாயில், வயிற்றில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தப்படி நூதன முறையில் சாலை மறியலில் நரிகுறவர்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே தலைவிரித்தாடுகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் லாரிகளில் நீரை விலை கொடுத்து வாங்கி புழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அப்பாடா.. ஒரு வழியாக, நாளை மறுநாள் ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவமழை! அப்பாடா.. ஒரு வழியாக, நாளை மறுநாள் ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவமழை!

    வெயிலின் தாக்கம்

    வெயிலின் தாக்கம்

    பெரும்பாலான கிராமங்களில் பல கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    குடிநீர் பற்றாக்குறை

    குடிநீர் பற்றாக்குறை

    இதன் ஒரு பகுதியாக நரிக்குறவர் வசிக்கும் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் சரிவர வருவதில்லை என கூறப்படுகிறது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குடி நீர் பற்றாக்குறையை போக்க பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.

    சாலை மறியல்

    சாலை மறியல்

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக கூறி ஆவேசம் அடைந்த அவர்கள் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    போக்குவரத்து பாதிப்பு

    தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக அவர்களுக்கு டிராக்டர் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    English summary
    Heavy traffic jam in Triuttani as Narikkuravar peopleprotest for water crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X