சசிகலா புஷ்பா ஆவேசமாக பேச... அங்கிட்டும் இங்கிட்டும் நவநீதகிருஷ்ணன் ஓட.. அடடா!
சென்னை: சசிகலா புஷ்பா பேசிய பெரும் பேச்சு ஏற்படுத்திய பிரளயம் ஒரு பக்கம் இருக்க, அவர் பேசப் பேச ராஜ்யசபா அதிமுக குழு தலைவர் நவநீதகிருஷ்ணன் டென்ஷன் ஆன கதையைத்தான் இப்போது சமூக வலைதளங்களில் செமையாக கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
அதிமுகவினர் யாருமே இப்படி ஒரு டிவிஸ்ட்டை சசிகலா புஷ்பா கொடுப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதா என்ற சிங்கத்திற்கு முன்பு இப்படி யாரும் இதுவரை சிலுப்பியதில்லை என்பதால் சசிகலா புஷ்பாவின் கோபாவேச மற்றும் அழுகைப் பேச்சு அதிமுகவினரை அதிர வைத்து விட்டது.

நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை என்பதால் ஒட்டுமொத்த தேசத்தையும் நேற்று பரபரப்புக்குள்ளாக்கி விட்டது. எல்லோருமே சசிகலாவின் ஆவேசத்தை மட்டுமே பார்த்த நிலையில் பலரின் கண்களுக்கு நவநீதகிருஷ்ணனின் டென்ஷன்தான் பெரிய அளவில் சிரிப்பலையை ஏற்படுத்தி விட்டது.
அதாவது சசிகலா பல்வேறு உணர்ச்சிகளையும் கொட்டிக் கலந்து கொடுத்து பேசிக் கொண்டிருந்தபோது அவரை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் நேற்று ரொமப்ச் சிரமப்பட்டவர் நவநீதகிருஷ்ணன் மட்டும்தான். ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் இருக்கையை நோட்டி தடதடவென ஓடினார். அவரிடம் ஆவேசமாகப் பேசினார்.
பின்னர் மீண்டும் சசிகலாவை நோக்கி ஓடி வந்தார். அவரைப் பார்த்து உட்கார் என்பது போல என்பது கோபமாகப் பேசி கையைக் காட்டினார். பிறகு மீண்டும் குரியனிடம் ஓடினார். இப்படியாக அங்குமிங்குமாக அவர் ஓடியதை பலர் சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
எப்படியாவது சசிகலாவை பேச விடாமல் தடுத்து விட வேண்டும் என்று அவர் டென்ஷனுடன் அங்குமிங்கும் திரிந்தது பெரிய சிரிப்பலையை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி விட்டது. சசிகலாவை பேச விட்டு அதனால் தலைமையிடம் தான் வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடுமே என்ற அவஸ்தையில்தான் இப்படி நவநீதகிருஷ்ணன் நிலை கொள்ளாமல் தவித்துப் போய் விட்டார் என்றும் பலர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்..!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications