சாலையோரத்தில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம்.. கரூர் அருகே பரபரப்பு!
கரூர் அருகே சாலையோரத்தில் கிடந்த சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்: பரமத்தி அருகே சாலையோரத்தில் கிடந்த சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், பரமத்தியை அடுத்துள்ள கொளந்தாப்பாளையம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அந்த சாக்குமூட்டையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
அந்த பெண் யாரென்று அடையாளம் தெரியவில்லை. உடல் முற்றிலும் அழுகியுள்ளதால் அந்தப் பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளாரா? எங்கே கொலை செய்யப்பட்டார்? இங்கே கொண்டுவந்து போட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications