Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலையில் ஷாக்.. வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம ஒளி... வேலூரில் பெண் படுகாயம்!

வேலூர் அருகே அதிகாலையில் வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம ஒளியால் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

Subscribe to Oneindia Tamil

வேலுர்: வானியம்பாடி அருகே அதிகாலையில் வீடு ஒன்றின் மீது பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம ஒளி விழுந்தது. இதில் அந்த வீட்டின் மேற்கூரை துள் தூளாக நொறுங்கியது.

வீட்டில் இருந்த பெண் ஒருவரும் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானியம்பாடியை அடுத்த துருங்கி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி ஓட்டுநரான இவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுள்ளார்.

பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம ஒளி

பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம ஒளி

அவரது மனைவி புவனேஷ்வரி வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் அவரது வீட்டின் மீது மர்ம ஒளி ஒன்று விழுந்தது.

பெண்ணுக்கு பலத்த தீக்காயம்

பெண்ணுக்கு பலத்த தீக்காயம்

இதில் வீட்டின் மேற்கூறை நொறுங்கி தூள் தூளானது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புவனேஷ்வரி பலத்த தீக்காயம் அடைந்தார்.

நொங்கிய வீடு

நொங்கிய வீடு

பலத்த சத்தம் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் வீடு முற்றிலும் சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.மேலும் பலத்த தீக்காயத்துடன் போராடிய புவனேஷ்வரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடியை போன்ற பலமடங்கு சத்தம்

இடியை போன்ற பலமடங்கு சத்தம்

புவனேஷ்வரியின் கணவர் வெங்கடேசன் வீட்டில் இல்லாததால் அவர் உயிர் தப்பினார். எரிக்கல் போன்று இடியை போன்ற பல மடங்கு சத்தத்துடன் ஒரு ஒளி வீட்டின் மீது விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வானியல் விஞ்ஞானிகள் ஆய்வு

வானியல் விஞ்ஞானிகள் ஆய்வு

இதுகுறித்து வானியர் விஞ்ஞானிகள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். சக்தி வாய்ந்த எரிகல் ஏதேனும் வீட்டின் மீது விழுந்ததா என்றும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு விழுந்த எரிகல்

கடந்த ஆண்டு விழுந்த எரிகல்

இதே வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எரிகல் ஒன்று விழுந்த சம்பவத்தில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+