நீட் தேர்வு: வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் டிக்கெட்.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மற்றும் உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மற்றும் உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படாமல் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு அரசு செலவில் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி முதன்மை அலுவலகர்கள் மூலம் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர் மற்றும் உடன் செல்லும் ஒருவருக்கு பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் இலவசம் என்றும், டிக்கெட் பெற்றுக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கை 04.05.2018 pic.twitter.com/2Cxs7ZaKEz
— DIPR TN (@TNGOVDIPR) May 4, 2018
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, அடையாள அட்டையை காட்டி மாணவர்கள் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்கள் 14417 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications