வாக்காளர்களுக்கு “எலி மருந்து” விநியோகம்- அதிமுகவினர் கைது
நெல்லை: முக்கூடல் அருகே வாக்காளர்களுக்கு எலி மருந்து விநியோகித்த அதிமுகவினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் வாக்காளர்களுக்கு டிசர்ட் மற்றும் எலி மருந்து வழங்கியது தொடர்பாக அதிமுகவினர் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நெல்லை மாவட்டம், முக்கூடலில் முதல்வர் ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டுகள் மற்றும் எலி மருந்துகள் அடங்கிய துணிப்பை அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக வழங்கப்படுவதாக பறக்கும்படை தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து தாசில்தார் சங்கரநாராயணன் தலைமையிலான பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிமுகவை சேர்ந்த 3 பேர் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஜெயலலிதா படம் பொறித்த டி-சர்ட் மற்றும் எலி மருந்து அடங்கிய துணிப்பையை விநியோகம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 9 டி சர்ட்டுகள் மற்றும் 8 எலி மருந்து பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து முக்கூடல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதிமுகவை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட டிசர்ட்டுகள் மற்றும் எலி மருந்துகள் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அவற்றை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் வழங்காமல் அங்குள்ள குடிநீர் பம்பிங் அறையில் இருப்பு வைத்துள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர் பம்பிங் அறையை திறந்து டிசர்ட் மற்றும் எலி மருந்து அடங்கிய 60 துணிப் பைகளை எடுத்து வீடு, வீடாக விநியோகம் செய்தது பறக்கும்படை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேர்தலுக்குதான் இன்னும் பலநாட்கள் இருக்கிறதே, இந்த எலி மருந்து தேர்தல் முடிவு தெரிந்தபின்புதான் எங்களுக்கு தேவைப்படும் என்று மக்கள் கிண்டலாக பேசிக் கொள்கின்றனர்.
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications