For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரிக்குறவர்களுடன் தீபாவளி கொண்டாடினார் நெல்லை ஆட்சியர்!

நரிக்குறவர்களுடன் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார்.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினார்.

தீபங்களின் திருவிழாவான தீபாவளி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகளும், பலகாரங்களும், புத்தாடைகளும் களை கட்டும். தீபாவளி பண்டிகை ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவத்தை தரும்.

Nellai Collector celebrates Diwali with Narikuravas

சிலர் மனைவி, மக்களுடனும், மேலும் சிலர் நண்பர்களுடனும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நரிக்குறவர்களை தனது அலுவலகத்துக்கு நேற்று வரவழைத்தார். அங்கு அவர்களுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்.

நரிக்குறவர்களும் புத்தாடை அணிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினர். இதனால் அப்பகுதியில் ஆரவாரம் இருந்தது.

English summary
Nellai Collector Sandeep Nandoori celebrates Diwali with Narikuravas people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X