தொடர்ச்சியாக தேர்வு.... அடுத்த மாதம் 'பிராக்டிக்கல்'.. விழிபிதுங்கும் நெல்லை மாணவர்கள்!!
நெல்லை: பள்ளி இறுதி வகுப்புகளுக்கு தொடர்ந்து திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. இதனால் அவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் செய்முறை தேர்வுக்கு தயாராக முடியாமல் திணறி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்காக மாணவ, மாணவிகள் இரவு பகலாக படித்து வருகி்ன்றனர்.

இந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு திருப்புதல் தேர்வானது பாடங்களை நினைவு கூரும் வகையில் நடந்து வருகிறது. இதனால் அடுத்த மாதம் நடத்தப்படும் செய்முறை தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியாமல் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்ட திருப்புதல் தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
வரும் பிப்ரவரி 9 ஆம் தேதிவரை இந்த தேர்வுகள் நடக்கின்றன. இதனால் பிப்ரவரி இரண்டாவது வாரம் தொடங்கும் செய்முறை தேர்வுக்கு எப்படி தயாராவது என மாணவர்கள் சிண்டை பிய்த்து கொண்டு வருகி்ன்றனர்.
இதுகுறித்து சில மாணவர்கள் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது. நெ்ல்லை மாவட்டத்தில் மட்டும்தான் இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த இருமுறை தேர்வு என்ற கல்வித்துறை நடைமுறையை மெட்ரிக் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இந்த தேர்வுக்கு தயாராவதால் செய்முறை தேர்வுக்கு படிக்க முடியவில்லை. இதனால் தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறோமோ என்று அச்சமாக உள்ளது" என கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications