தொடர்ச்சியாக தேர்வு.... அடுத்த மாதம் 'பிராக்டிக்கல்'.. விழிபிதுங்கும் நெல்லை மாணவர்கள்!!
நெல்லை: பள்ளி இறுதி வகுப்புகளுக்கு தொடர்ந்து திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. இதனால் அவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் செய்முறை தேர்வுக்கு தயாராக முடியாமல் திணறி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்காக மாணவ, மாணவிகள் இரவு பகலாக படித்து வருகி்ன்றனர்.

இந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு திருப்புதல் தேர்வானது பாடங்களை நினைவு கூரும் வகையில் நடந்து வருகிறது. இதனால் அடுத்த மாதம் நடத்தப்படும் செய்முறை தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியாமல் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்ட திருப்புதல் தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
வரும் பிப்ரவரி 9 ஆம் தேதிவரை இந்த தேர்வுகள் நடக்கின்றன. இதனால் பிப்ரவரி இரண்டாவது வாரம் தொடங்கும் செய்முறை தேர்வுக்கு எப்படி தயாராவது என மாணவர்கள் சிண்டை பிய்த்து கொண்டு வருகி்ன்றனர்.
இதுகுறித்து சில மாணவர்கள் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது. நெ்ல்லை மாவட்டத்தில் மட்டும்தான் இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த இருமுறை தேர்வு என்ற கல்வித்துறை நடைமுறையை மெட்ரிக் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இந்த தேர்வுக்கு தயாராவதால் செய்முறை தேர்வுக்கு படிக்க முடியவில்லை. இதனால் தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறோமோ என்று அச்சமாக உள்ளது" என கருத்து தெரிவித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications