தொடர்ச்சியாக தேர்வு.... அடுத்த மாதம் 'பிராக்டிக்கல்'.. விழிபிதுங்கும் நெல்லை மாணவர்கள்!!
நெல்லை: பள்ளி இறுதி வகுப்புகளுக்கு தொடர்ந்து திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. இதனால் அவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் செய்முறை தேர்வுக்கு தயாராக முடியாமல் திணறி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்காக மாணவ, மாணவிகள் இரவு பகலாக படித்து வருகி்ன்றனர்.

இந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு திருப்புதல் தேர்வானது பாடங்களை நினைவு கூரும் வகையில் நடந்து வருகிறது. இதனால் அடுத்த மாதம் நடத்தப்படும் செய்முறை தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியாமல் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்ட திருப்புதல் தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
வரும் பிப்ரவரி 9 ஆம் தேதிவரை இந்த தேர்வுகள் நடக்கின்றன. இதனால் பிப்ரவரி இரண்டாவது வாரம் தொடங்கும் செய்முறை தேர்வுக்கு எப்படி தயாராவது என மாணவர்கள் சிண்டை பிய்த்து கொண்டு வருகி்ன்றனர்.
இதுகுறித்து சில மாணவர்கள் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது. நெ்ல்லை மாவட்டத்தில் மட்டும்தான் இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த இருமுறை தேர்வு என்ற கல்வித்துறை நடைமுறையை மெட்ரிக் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இந்த தேர்வுக்கு தயாராவதால் செய்முறை தேர்வுக்கு படிக்க முடியவில்லை. இதனால் தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறோமோ என்று அச்சமாக உள்ளது" என கருத்து தெரிவித்துள்ளனர்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications