தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ‘இடைக்கால' கூடுதல் பொறுப்பு இதற்குதானாம்!
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் குடிநீர் வடிகால் வாரியம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவுக்கு திடீரென மீண்டும் சென்னை குடிநீர் வாரியம் கொடுக்கப்பட்டது எதற்காக என்பது குறித்துதான் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தேர்தல் அதிகாரியாக ஒருவர் நியமிக்கப்பட்டுவிட்டாலே தலைமை தேர்தல் ஆணையத்தின் கீழ் அவர் வந்துவிடுவார். ஆனால் கோட்டையில் கடந்த வாரம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சிதான் கிடைத்திருக்கிறது.

அண்மையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சத்யபிரதாசாகுதான் திடீரென சென்னை குடிநீர் வடிகால் வாரியப் பொறுப்பை மீண்டும் ஏற்றிருக்கிறார். தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது முதல் சத்யபிரதாசாகு பதவி வகித்த குடிநீர் வாரிய இயக்குநர் பதவி காலியாகத்தான் இருந்தது.
தற்போது எங்கும் நடக்காத விசித்திரமாக தேர்தல் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பாக மாநிலப் பொறுப்பு கொடுத்துள்ளது தமிழக அரசு. இது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, குடிநீர் வாரிய ஒப்பந்தங்களை புதிய அதிகாரி ஒருவரிடம் கொடுத்து மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதற்கு பதில் சத்யபிரதாசாகுவே பெஸ்ட் சாய்ஸ் என முடிவெடுத்ததாம் கோட்டை.
அதனால்தான் 'சில பணிகள்' முடிக்க வேண்டியது இருப்பதால் 'இடைக்கால' கூடுதல் பொறுப்பாக மட்டும் குடிநீர் வாரியத்தை சத்யபிரதாசாகு பார்ப்பார் என 'முன்ஜாக்கிரதை'யுடன் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம். இந்த விவகாரம்தான் கோட்டையில் ஹாட் டாபிக்
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications