ஓகி எல்லாம் சும்மா.. அதுக்கு அடுத்து இன்னொன்னு இருக்கு.. வரிசையில் காத்திருக்கும் புதிய புயல்!
ஓகி புயலுக்கு அடுத்தபடியாக அந்தமானில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது.
Recommended Video

சென்னை: இந்த வருடத்தின் முதல் புயலாக உருவாகி இருக்கிறது ஓகி புயல். இந்த புயலே இன்னும் முழுவதுவாக முடியாமல் இருக்கும் நிலையில் அடுத்த புயலுக்கான அறிவிப்புகள் வெளியாகிவிட்டது.
தற்போது உருவாகி இருக்கும் ஓகி புயல் கன்னியாகுமரி பகுதியில் இருக்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் அரபிக் கடல் நோக்கி நகரலாம். ஆனால் அதே சமயத்தில் அந்தமானில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை எப்போது வேண்டுமானாலும் புயலாக மாறலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த தாழ்வு நிலை குறித்த அதிர்ச்சியுட்ட கூடிய பல தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

முதல் புயல் ஓகி
இந்த வருட மழை காலத்தின் முதல் புயல் என்ற சிறப்பு பெயருடன் கன்னியாகுமரியை தாக்க தொடங்கி இருக்கிறது ஓகி புயல். தற்போது இந்த புயல் கன்னியாகுமரிக்கும், திருவனந்தபுரத்திற்கும் இடையில் இருக்கிறது. இதனால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கன்னியாகுமரியில் தற்போது 70 கிமீ வேகத்தில் மோசமாக காற்று வீசிக் கொண்டு இருக்கிறது.

புயலை சமாளிக்கலாம்
இந்த புயலை கொஞ்சம் எளிதாக சமாளித்துவிடாமல் என்றுதான் எல்லா வானிலை ஆய்வு மையங்களும் கணித்து இருக்கிறது. தற்போது இந்த ஓகி புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவாக்கிக் கொண்டே வருகிறது. இது அரபிக்கடலை நோக்கி சென்று தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தமிழ்நாட்டில் எங்குமே கரையை கடக்காது. எனவே இதை குறித்து அதிக அச்சப்பட தேவையில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த புயல்
ஓகி புயல் சரியாக நாளை மதியம் தன் வீரியத்தை இழக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் அந்த புயல் முடிந்து இரண்டு நாள் இடைவெளியில் மூன்றாம் தேதி அடுத்த புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இதுதான் ஓகி புயலைவிட மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்கள். சென்னையில் இரண்டு வாரத்திற்கு முன் மழை பெய்த போதே இந்த புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

எப்படி உருவாகும்
தற்போதுதான் இந்த புயலுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருக்கிறது. அந்தமான் கடல் பகுதிக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை உருவானது. தற்போது வரை இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 3ம் தேதிக்கு பின் இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவாக வாய்ப்புள்ளது. தொடக்கத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அதன்பின் புயல் சின்னமாக மாறும். இது புயல் சின்னமாக மாறினால் கண்டிப்பாக தமிழ்நாட்டு கடல் பகுதியில்தான் கரையை கடக்கும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications