அடடா... புது பஸ்ஸு அதுக்குள்ள புஸ்ஸுன்னு போயிருச்சே.. திருவாரூரில் பாதியில் நின்ற பேருந்து!
புதிய அரசு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது.
Recommended Video

திருவாரூர்: புதிய அரசு பேருந்து ஒன்று மீண்டும் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய அரசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் 515 புதிய அரசு சொகுசு பேருந்து சேவையை முதல்வர் பழனிசாமி ஜூலை 2-ம் தேதி தொடங்கி வைத்தார். அரசு விரைவு போக்குவரத்துக்கழக வரலாற்றில் முதல்முறையாக ரூ.314 கோடி செல்வில் தயாரான இந்த பேருந்துகளில், குளிர்சாதன, படுக்கை வசதிகள், கழிப்பறை ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா வசதிகள் கொண்டு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் பேருந்து சேவையின் இரண்டாம் நாளிலேயே நாகர்கோவில் - நெல்லை இடையே இயக்கப்பட்டு வந்த நடத்துனர் இல்லா பேருந்து ஒன்று கடந்த சனிக்கிழமை நடுவழியில் திடீர் என பழுதடைந்து, ஒழுகினசேரியில் நின்று விட்டன. இதனால் அதிர்ச்சியும், அவதியும் அடைந்த பயணிகள், நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் வேறு பேருந்தில் மாற்றி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், இன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி ஒரு புதிய பேருந்து புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ஆனால் திடீரென்று திருவாரூர் அருகே கூடூர் என்ற கிராமத்தின் அருகே பழுதாகி இந்த பேருந்து நின்றுவிட்டது. அதற்கு காரணம், பேருந்தின் இரும்பு குழாய் உடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பேருந்தில் பயணித்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
பேருந்து பழுதாகி நின்றதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேருந்து நிறுவன ஊழியர்கள் பேருந்தை சரிசெய்ய செய்ய கொண்டுசென்றனர். புதிய பேருந்துகள் இப்படி பழுதாகி நடுவழியில் நின்றுவிடுவதால் அதிர்ச்சியடைந்த பயணிகள், இயக்கப்பட்டு வரும் புதிய பேருந்துகள் அனைத்தையும் ஒருமுறையாவது ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications