புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டும்.. வராண்டாக்களில் இயங்கும் அரசுப்பள்ளிகள்.. கிருஷ்ணகிரியில் அவலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள 3 அரசுப்பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் 3 அரசு பள்ளிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த புதிய கட்டடங்கள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபதி, திருவனப்பட்டி, கொட்டுக்காரன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பள்ளிகள் கடந்த 2011ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இதனால் போதிய இடவசதி இன்றி மாணவர்கள் தவித்த நிலையில், கூடுதலாக கட்டடங்கள் கட்டப்பட்டன. கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஏப்ரல் மாதம் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய கட்டடங்கள் அடுத்த சில நாட்களிலேயே பயன்பாட்டுக்கு வரும் என்று மாணவ மாணவிகள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், இதுவரை புதிய கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன.
மின்சார வசதி அமைக்காததால் கட்டடங்கள் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. புதிய கட்டடங்களில் படிக்க ஆவலுடன் இருக்கும் மாணவர்கள், மீண்டும் தொடக்கப்பள்ளிகளின் வராண்டாக்களில் பயிலும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications