தமிழக எதிர்ப்பையும் மீறி பெயர் மாற்றம்- "நெய்வேலி" நீக்கம்... இனி 'என்எல்சி' இந்தியா லிமிடெட்!
சென்னை: தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பை மீறி "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்" என்ற பெயரை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழக மக்களின் நிலத்திலும் உழைப்பிலும் உருவான இந்த நிறுவனம் நவரத்னா தகுதி பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Corporation Limited) என்ற பெயரை வெறும் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என மாற்ற (NLC India Limited) தொழிலாளர்களிடம் கருத்து கேட்டது மத்திய அரசு.

நாடு முழுவதும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் இருப்பதால் "என்.எல்.சி" என பொதுப்பெயர் ஒன்றை சூட்டுகிறோம் என மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த எதிர்ப்பை மதிக்காமல் திட்டமிட்டபடி தற்போது என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் "நெய்வேலி" என்ற பெயர் இனி நிறுவனத்தில் பெயரில் இருக்காது.
இது தமிழகத்தின் பெரும் அடையாளத்தை மறைக்கும் செயல் என்றுa என்.எல்.சி. தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications