கர்நாடகாவில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன: மனித உரிமை ஆணைய உறுப்பினர் முருகேசன்
சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் முருகேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நீதிபதி முருகேசன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரி நீர் பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் நடந்த வன்முறைகளில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது.

டெல்லி சென்றதும் ஆணைய தலைவர், சக உறுப்பினர் ஆகியோருடன் கலந்து பேசி, கூட்டாக ஆலோசனை நடத்துவோம். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2 மாநிலங்களில் நடந்த சம்பவம் பற்றியும் ஆய்வு செய்வோம். கர்நாடக மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு, உயிரிழப்புகள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும்.
இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் பற்றி எதுவும் கூற முடியாது. இது இரு மாநிலங்களின் பிரச்னை என்பதால் மனித உரிமைகள் ஆணையம் தான் முடிவு செய்யும்.
இவ்வாறு முருகேசன் கூறினார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications