நடிகை நிலானி தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் அனுமதி
Recommended Video
சென்னை: நடிகை நிலானி தனது வளசரவாக்கம் வீட்டில் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
நடிகை நிலானி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். பிரியமானவள் சீரியலில் வைத்தியின் மனைவியாக நடித்தவர். இவர் சினிமா உதவி இயக்குநர் லலித்குமாரை திருமணம் செய்ய மறுத்ததால் சென்னை கேகே நகரில் நடுரோட்டில் கடந்த 16-ஆம் தேதி தீவைத்து கொளுத்தி கொண்டார்.
இந்நிலையில் போலீஸார் நிலானியை எந்த நேரத்திலும் கைது செய்யக் கூடும் என்பதால் அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. எனினும் அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தனக்கும் லலித்குமார் தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்நிலையில் இறப்பதற்கு முன்னர் லலித்குமார் நிலானியை மிரட்டல் விடுத்த ஆடியோவை நமக்கு பிரத்யேகமாக அவர் வழங்கினார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சென்னை வளசரவாக்கம் வீட்டில் நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.
இதையடுத்து மயங்கிய நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.