சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது.. பொன் ராதாகிருஷ்ணன் பெருமிதம்
எந்த துறையிலும் சல்லிக்காசுகூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: எந்த துறையிலும் சல்லிக்காசுகூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் பயங்கரவாதத்தை அடக்க அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது.
மத்திய அரசு விவசாயிகள் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை 50 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. நெல், சோளம், கம்பு, சிறு தானியங்கள், துவரம் பருப்பு, பாசி பருப்பு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை கணிசமாக உயர்த்தி இருப்பதன் மூலம், விவசாயிகள் நலனை மேம்படுத்தி உள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.