உணவு இன்றி தவிக்கும் மக்கள்.. தண்ணீர் குடித்து உயிர் வாழும் பத்திரிக்கையாளர்கள்.. தூத்துக்குடி அவலம்
தூத்துக்குடி படுகொலை காரணமாக மக்கள் உணவு இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். யாரும் வெளியே செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி படுகொலை காரணமாக மக்கள் உணவு இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். யாரும் வெளியே செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அங்கு போலீஸ் நடத்திய கொடூரத்தால் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயந்து கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக ஆண்கள் வீட்டிற்குள்ளே முடங்கி இருக்கிறார்கள். எல்லா தெருக்களிலும் போலீஸ் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

கடைகளும் கிடையாது
இதனால் அங்கு மொத்தமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு எந்த கடையும் கடந்த மூன்று நாட்களாக திறக்கவில்லை. எந்த வீடுகளிலும் பெரும்பாலும் குடிக்க கூட தண்ணீர் இல்லை. மூன்று நாட்களுக்கு முன் பிடித்த தண்ணீரை வைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மாநகராட்சி தண்ணீரும் வரவில்லை, மின்சாரம் இல்லாததால் போர் தண்ணீரும் கிடையாது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உள்ளே வெளியே செல்ல முடியாது
அங்கே 144 தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், யாரும் ஊரை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேபோல் வெளியில் உள்ள மக்களும் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் வெளியில் இருந்தும் கூட அவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு சென்னையில் வெள்ளம் வந்த போது, தூத்துக்குடியில் இருந்து லாரியில் வந்து மக்கள் உணவு கொடுத்தனர், இப்போது அவர்களுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
|
பத்திரிக்கையாளர்கள் கஷ்டங்கள்
மக்களின் துயரங்களை உடனுக்குடன் செய்தியாக கொடுக்கும் பத்திரிக்கையாளர்களும் அதிக சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவர்களும் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர் ''தூத்துக்குடியில் இருக்கும் எல்லா பத்திரிக்கையாளர்களும் கிட்டத்தட்ட தண்ணீர் குடித்துதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மொத்த நகரமும் செயலிழந்துவிட்டது. உணவு இல்லை, இருக்கும் தண்ணீரும் குறைந்து கொண்டே வருகிறது'' என்று வருத்தப்பட்டுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications