வர்தா புயலால் சின்னாபின்னமான கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்.. உதவி செய்ய கொளத்தூர் மணி கோரிக்கை
வர்தா புயலால், உணவு, நீர், மின்சாரம் இல்லாமல் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தவித்துவரும் ஈழ மக்களை மீட்க வேண்டும் என்று கொளத்தூர் மணி கோரியுள்ளார்.
சென்னை: வர்தா புயல் பழவேற்காட்டில் கரையை கடந்தது. இதனால் கும்மிடிப்பூண்டி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழ மக்கள் உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களை இந்தத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கோரியுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை வர்தா புயல் பழவேற்காட்டில் கரையை கடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் ஈழ மக்கள் உணவின்றியும், குடிக்க நீரின்றியும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் முகாம் புயலால் முற்றிலுமாக அழிந்துள்ளது என்றும், முகாமில் மீட்புப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கொளத்தூர் மணி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கடற்கரை எதிரே உள்ள எழிலகத்தில் மறுவாழ்வு ஆணையரை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் முறையிட்டார்.
சோறின்றி இருண்ட வாழ்க்கையை வாழ்ந்து வரும் முகாம் மக்களை மீட்க இதுவரை எந்தப் பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அம்மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மறுவாழ்வு ஆணையரை சந்தித்தனர். இந்த அமைப்பில் அங்கம் வகித்துள்ள பத்துக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கொளத்தூர் மணியுடன் சென்று ஆணையரைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications