பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்கமாட்டார்கள்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டார்கள் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை: கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டார்கள் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரோல் காலத்தில் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சசிகலாவை யாரேனும் அமைச்சர்கள் சந்திப்பார்களா என்ற கேள்வி கடந்த சில நாள்களாக அவர்களையே சுற்றி வந்தது.

ஓ.எஸ்.மணியன் பதில்
சசிகலா பரோலில் வந்தால் சந்திப்பீர்களா என்ற கேள்வி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன் வைக்கப்பட்டது. அதற்கு வரட்டும், சந்திப்போம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் ஓட்டம்
நேற்றைய தினம் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் சசிகலாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு சில எம்எல்ஏக்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். சிலரோ நாங்கள் சந்திக்கமாட்டோம் என்று கூறினர். அவர் பரோலில் வந்துள்ளதால் எந்தவித அரசியல் மாற்றமும் ஏற்படாது என்று கூறினர்.

அமைச்சர் வெல்லமண்டி
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் ஜெயலலிதா மரணம் குறித்து பேசினார்.

சசியை சந்திக்க மாட்டோம்
அவர் பேசுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் அழைத்தால் அமைச்சர்கள் விளக்கமளிப்பர். பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க மாட்டார்கள் என கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications