தமிழை எதிர்ப்பவர்கள் தமிழ்நாட்டில் வாழ முடியாது - பொன்.ராதாவுக்கு கனிமொழி எச்சரிக்கை: வீடியோ
தமிழ்நாட்டில் தமிழை எதிர்த்துவிட்டு வாழ முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு கனிமொழி எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி: தமிழை எதிர்த்து வாழ நினைப்பவர்கள் தமிழகத்தில் வாழ முடியாது என கனிமொழி எம்.பி கம்பத்தில் நடந்த கூட்டத்தில் கூறினார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு நேரடி எச்சரிக்கையாக இதனை விடுத்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த மாணவர்கள் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தமிழை வைத்து யாரும் பிழைப்பு நடத்தவில்லை. தமிழால்தான் இங்கு நிறைய பேர் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழை எதிர்த்து, தமிழுக்கு ஊறுவிளைவித்து தமிழ்நாட்டில் வாழ முடியாது என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும் என பகிரங்கமாக எச்சரிக்க்கை விடுத்தார். நேற்று முன்னாள் அமைச்சர் பொன்முடி காரைக்குடியில் பேசிய கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழகத்தில் இந்தியை திணித்தால் அவர் பதவி பறிபோகும் என கூறினார்.
கனிமொழியின் இந்த கடுமையான பேச்சுக்குக் காரணம் மத்திய இனை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், திமுகவினர் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என கூறியிருந்தார். அவருக்கு பதில் அளுக்கும் விதமாகவே கனிமொழி இவ்வாறு பேசியுள்ளார்.