ரஜினிக்கு வழங்கிய விருதில் அரசியல் இல்லை: பாஜக
வேலூர்: பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி வேலூரில் இன்று நடந்தது. மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இதில் கலந்து கொண்டார்.
அப்போது நிருபர்களுக்கு தமிழிசை அளித்த பேட்டி: லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் அ.தி.மு.க., தி.மு.க. வுக்கு அடுத்தபடியாக பாஜக வளர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. பாஜகவில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்களாக சேருகின்றனர்.

தமிழக அரசு முடங்கி கிடக்கிறது. அரிசி, முட்டை, பருப்பு, சாலை பணிகளில் ஊழல் நடந்துள்ளது. குழந்தை இறப்பை அரசியலாக்க வேண்டாம் அதே நேரம் அந்த பிரச்சினையை விட்டுவிட முடியாது. குழந்தைகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுத்து வருகிறார். கர்நாடக அரசு காவிரியில் புதிய அணை கட்டுவதை கடுமையாக எதிர்க்கிறோம். இதுபற்றி உமா பாரதிக்கு கடிதம் எழுதியுள்ளோம். நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.
ரஜினிக்கு சாதனையாளர் விருது வழங்கியதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. அவரது திறமை, சாதனையை மதித்து விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications