For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பைக் வீலிங், ரேசிங், ஈவ்டீஸிங் கூடாது.. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை போலீஸ் கட்டுப்பாடு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரை காவல்துறை அனுமதியளித்துள்ளது. கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரை காவல்துறை அனுமதியளித்துள்ளது. கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரிரு நாட்களே உள்ள நிலையில் புத்தாண்டை வரவேற்கும் ஏற்பாடுகளில் கேளிக்கை விடுதிகளும் ஹோட்டல்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறைவிதித்துள்ளது.

No wheeling, No Racing, No Eve-teasing : Police conditions for New year

அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடும் கேளிக்கை விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் அதற்கான தனி உரிமங்களை பெற வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு ஒருமணி வரை சிறப்பு உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேளிக்கை விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் இரவு ஒருமணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிக்கு மேல் மதுவிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீச்சள் குளங்கள் மேல் தற்காலிக மேடைகள் அமைக்க தகுதிச்சான்றிதழ் பெற வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாகசங்கள் செய்யக்கூடாது.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனம், கார்களை வேகமாக ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடலில் இறங்கக்கூடாது. கடலுக்கு அருகில் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாழ்த்து கூறும் பெயரில் பெண்களை கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

English summary
Chennai Police announced new conditions for the people who are all celebrating new year at night. police has given permission for till 1am of 31st night for hotels and clubs to celebrate new year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X