நர்ஸை பலாத்காரம் செய்து கழுத்தை வெட்டி கொலை.. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்துரில் செவிலியர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொந்தரவினால் கொலை நடந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக உறவினர் ஒருவரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தர் தாலுகா அடுத்துள்ள நத்தம்பட்டி அருகே முத்துகுமாரபுரம் பகுதியை சேர்ந்த செல்வலிங்கம். அவரது மகள் செல்வி, வயது 23. ஸ்ரீவில்லிபுத்துர் தனியார் செவலியர் பயிற்சி பள்ளியில் செவலியர் படிப்பை முடித்துவிட்டு கோவை , கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் செவ வியராக பணியாற்றி வந்துள்ளார்.

அங்கு பணிபுரிய விருப்பம் இல்லாத காரணத்தால் சொந்த ஊரான திருவில்லிபுத் துரில் தனியார் மருத்துவமனையில் வேலை கேட்டு இன்று வேலைக்கு வருவதாக கூறிவிட்டு சென்று உள்ளார்.
இந்நிலையில் திருவில்லிபுத்தர் மடவார்வளாகம் அருகே பெரியகுளம் கண்மாய் சுடுகாட்டிற்க்கு செல்லும் பாதையில் இளம் பெண் கழுத்தில் வெட்டு பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்திற்கு காவல்துறை ஆய்வாளர் மகேஷ்குமார் திருவில்லிபுத்தர் துணை கண்காணிப்பாளர் சங்கரேஸ்வரன் சம்பவ இடத்திற்க்கு நேரில் பார்வையிட்டு உடலை கைப்பற்றி திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications