பொதுச்செயலாளர் நியமனமே தவறாக இருக்கும்போது தினகரன் எப்படி தொடரமுடியும்?: ஓபிஎஸ் 'சுளீர்'
பொதுச்செயலாளர் நியமனமே தவறாக இருக்கும் போது அவரால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன் எப்படி தொடர முடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: பொதுச்செயலாளர் நியமனமே தவறாக இருக்கும் போது அவரால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன் எப்படி தொடர முடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியை தினகரன் வழிநடத்துவது குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் கைதாகி ஒரு மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்சிப்பணியை தொடரவுள்ளதாக தெரிவித்தார்.
எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கிவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து தான் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டதாக கூறினார் டிடிவி தினகரன்.

தினகரன் பேச்சால் பீதி
சிறைவாசத்துக்குப் பிறகு மீண்டும் கட்சிப்பணியை தொடர உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு எடப்பாடி தலைமையிலான அணியினரை பீதியடையச் செய்தது.

எப்படி தொடர முடியும்?
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதே தவறாக இருக்கும் போது, அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் மட்டும் எப்படி தொடர முடியும் என கேள்வி எழுப்பினார்.

தொண்டர்கள் முடிவு செய்வர்
கட்சியை தினகரன் வழிநடத்துவது குறித்து அதிமுக தொண்டர்கள்தான் முடிவு செய்யவேண்டும். டிடிவி தினகரன் முடிவு செய்யக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே..
உண்மையான அதிமுக நாங்கள்தான், இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கே என்று ஓ பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார். மேலும் தாங்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே இரு அணிகளும் இணையும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாகக் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications