சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இன்று பேரணி
அதிமுக எம்எல்ஏக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க வலியுறுத்தும் வகையில், அவர்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை: சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார்கள்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேற்று இரவு 7.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் சென்றனர்.

நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் பதவியேற்றிருக்கும் ஆட்சி ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசத்துடன் கூடிய ஆட்சியாக இல்லை. சசிகலா குடும்பத்தினுடைய ஆட்சிதான் பதவியேற்றுள்ளது. இந்த ஆட்சியை நீக்கி, மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை நிறுவுவோம். இந்தச் சபதத்தைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம்.
அதிமுக எம்எல்ஏக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க வலியுறுத்தும் வகையில், அவர்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடைபெறும். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அவர் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு கட்சி நடத்தும் துர்பாக்கிய சூழலை அகற்ற வேண்டும். தமிழகத்தில் ஏழரை கோடி மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்பாத, விரோத ஆட்சி தூக்கி எறியப்படும். அதுவரை ஓயமாட்டோம் என்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுகவின் சசிகலா தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்ட உள்ளார் ஓ.பன்னீர்செல்வம். எல்லா தொகுதிகளுக்கும் அவர் மட்டுமே செல்ல முடியாது என்பதால் அவர் அணியிலுள்ள சீனியர்களும் பயணம் செல்கிறார்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications