முதல் கேபினெட் கூட்டத்திற்கு முன்பாக, ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர்செல்வம் அஞ்சலி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு கேபினெட் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இன்று முதல் முறையாக அமைச்சரவை புதிய முதல்வர் தலைமையில் கூடியது. முன்னதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
போயஸ் தோட்ட இல்லத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் வருகை தந்தார். பின்னர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் முதல்வர் பன்னிர்செல்வம் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தலைமைச் செயலகம் விரைந்தனர்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் கூடியது. ஜெயலலிதா மறைந்த பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications