அன்று பாரத ரத்னா கோரிய இதே வாய்தான்.. இன்று "அறைந்தார்" என்று அதே ராஜ்யசபாவில் கதறியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ்யசபாவில் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்று பேசிய சசிகலா புஷ்பாதான் இன்று ஜெயலலிதா என்னை அடித்தார் என கதறியழுத விசித்திரம் அரங்கேறி உள்ளது.

அதிமுகவில் திடீர் வளர்ச்சி கண்டவர் சசிகலா புஷ்பா. அதிமுக தலைவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடும் வகையில் கடந்த மார்ச் மாதம் அதிரடியாக ராஜ்யசபாவில் ஒரு கோரிக்கையை வைத்தார்.

Once Sasikala puspa demands Bharath Ratna to Jaya

அதாவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விவாதம் அது.. அதில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என பேச சபையே அதிர்ந்தது...

அப்போது சசிகலா புஷ்பாவின் மகளிர் அணிச் செயலர் பதவி பறிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருந்த சமயம்.. இப்படி பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் எனப் பேசினால் மீண்டும் ஜெ.வின் குட்புக்கில் இடம்பிடித்துவிடலாம் என கருதினார் சசிகலா புஷ்பா.

இப்போது ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பேசி 4 மாதங்களிலேயே அதே ராஜ்யசபாவில் என்னை அடித்துவிட்டார் ஜெயலலிதா; ராஜினாமா செய்ய சொல்கிறார் ஜெயலலிதா என கதறல் டிராமா போட்டு தேசத்தையே மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் சசிகலா புஷ்பா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+