24 உயர்நீதிமன்றங்கள்.. 652 நீதிபதிகள்.. 69 பேர் மட்டுமே பெண்கள்.. வௌங்கிடும்
இந்தியாவில் மொத்தம் 24 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் நீதிபதிகளாக பணிபுரிவோரில் 69 பேர் மட்டுமே பெண்கள்.
சென்னை: இந்தியாவில் நீதிபரிபாலனை செய்யும் நீதிமன்றங்களில் பெண்களின் பங்கு ஆகக்குறைவாய் இருக்கிறது. உயர்நீதிமன்றங்களில் ஒரு சதவீதம் கூட பெண் நீதிபதிகள் இல்லை என்ற வேதனைக்குரிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு உயர்நீதிமன்றங்களில் மட்டுமே பெண்கள் தலைமை நீதிபதியாக உள்ளனர். ஒன்று நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி
ஏற்ற இந்திரா பானர்ஜியாவார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிபதி ரோஹினியும், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மஞ்சுளா செல்லூரும் , கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நிஷிதா நிர்மல் மகாத்ரேவும் (பொறுப்பு) உள்ளனர்.
நான்கு பெண்கள் ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை வகிப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை. என்றாலும், மொத்தமாக உயர்நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகவே உள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 24 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. அதில் தற்போது பதவி வகிக்கும் நீதிபதிகள் 652 பேர். அவர்களில் 69 பேர் மட்டுமே பெண்கள். இவற்றிலும் அதிகபட்சமாக மும்பை உயர் நீதிமன்றத்தில் 12 பெண் நீதிபதிகள் உள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகளும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 8 உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லை.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை யாருமே இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் நாங்களும் ஒருவரை வைத்திருக்கிறோம் என்று பெயருக்கு சொல்ல ஒரே ஒரு பெண் நீதிபதி அங்கே பணியில் இருக்கிறார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஆர். பானுமதிதான். 33 சதவீத பெண் நீதிபதிகளாவது நீதிமன்றங்களில் பணியாற்ற எத்தனைக் காலம் ஆகுமோ?