ராஜ்யசபா தேர்தல்.. 6வது எம்.பி. இடத்துக்கு அதிமுகவும் போட்டியிடவில்லை!!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் 6வது எம்.பி. இடத்துக்கு அதிமுகவும் போட்டியிடாததால் திமுக நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியம். தற்போதைய நிலையில் அதிமுகவின் 4 வேட்பாளர்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் வெல்வது உறுதி.
6வது எம்.பி. இடத்துக்கு திமுக மட்டுமே வேட்பாளரை நிறுத்தியது. வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான இன்று தேமுதிகவும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. அதிமுகவும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

6 இடத்துக்கு 8 பேர் போட்டியிட்டிருந்தால்..
6வது இடத்துக்கு தே.மு.தி.கவும் போட்டியிட்டு அதிமுகவும் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தால் ஒரு எம்.பிக்கு 29 வாக்குகள் தேவை. 6 இடங்களுக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் போது 2 வாக்குமுறை பயன்படுத்தப்படுவது உண்டு.

2 வாக்குகள் எப்படி?
ஒரு எம்.எல்.ஏ தனது முதல் வாய்ப்பாக ஒரு எம்.பி. வேட்பாளருக்கும், இரண்டாவது வாய்ப்பாக இன்னொரு எம்.பி. வேட்பாளருக்கும் வாக்களிக்கவேண்டும். முதல் வாக்குபோல, இரண்டாவது வாக்கு என்பது நேரடி வாக்கு அல்ல. இதற்கு தனி மதிப்பீடு உண்டு. களத்தில் நிற்கும் 8 பேரில் 5 பேர் மட்டுமே முதல் ஓட்டில் 29 வாக்குகள் பெற்றிருந்தார்கள் என்றால், மீதமுள்ள 3 பேரில் இரண்டாவது ஓட்டின் மதிப்பின் அடிப்படையில் யார் அதிக மதிப்புகள் பெறுகிறார்களோ அவர்கள் 6-வது எம்.பி.யாக அறிவிக்கப்படுவார்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.

காங்கிரஸ் ஆதரவை கோராத திமுக
கடந்த முறை ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் ஆதரவை திமுக கோராது என்று அறிவித்துள்ளது.

அதிமுகவும் அறிவிக்கிறது?
அதே நேரத்தில் திமுகவோ, 6வது இடத்துக்கும் அதிமுக வேட்பாளரை அறிவிக்குமோ என்ற கவலையில் இருக்கிறது. அப்படி அறிவித்தால் தேர்தல் நடைபெறும்.

நெருக்கடியில் திமுக
தி.மு.க.விடம் மொத்தம் 26 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் இருக்கிறது. அ.தி.மு.க. தரப்பில் தலா 27 வாக்குகள் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்தாலே வெற்றிபெற்றுவிடலாம். அது அ.தி.மு.க கூட்டணிக்கு எளிமையானதுதான்.
அந்த நேரத்தில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை தி.மு.க பெறவேண்டும். தே.மு.தி.க. வராவிட்டால் காங்கிரசின் ஆதரவை தி.மு.க. நாடியே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

6 இடத்துக்கு 8 பேர் போட்டியிட்டால்...
6வது இடத்துக்கு தே.மு.தி.கவும் போட்டியிட்டு அதிமுகவும் ஒரு வேட்பாளரை நிறுத்தினால், ஒரு எம்.பிக்கு 29 வாக்குகள் தேவை. 6 இடங்களுக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் போது 2 வாக்குமுறை பயன்படுத்தப்படுவது உண்டு.

2 வாக்குகள் எப்படி?
ஒரு எம்.எல்.ஏ தனது முதல் வாய்ப்பாக ஒரு எம்.பி. வேட்பாளருக்கும், இரண்டாவது வாய்ப்பாக இன்னொரு எம்.பி. வேட்பாளருக்கும் வாக்களிக்கவேண்டும். முதல் வாக்குபோல, இரண்டாவது வாக்கு என்பது நேரடி வாக்கு அல்ல. இதற்கு தனி மதிப்பீடு உண்டு.
களத்தில் நிற்கும் 8 பேரில் 5 பேர் மட்டுமே முதல் ஓட்டில் 29 வாக்குகள் பெற்றிருந்தார்கள் என்றால், மீதமுள்ள 3 பேரில் இரண்டாவது ஓட்டின் மதிப்பின் அடிப்படையில் யார் அதிக மதிப்புகள் பெறுகிறார்களோ அவர்கள் 6-வது எம்.பி.யாக அறிவிக்கப்படுவார்கள் என்கிறது தேர்தல் ஆணையம்

நாளை கடைசி நாள்
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். அதனால் நாளை பரபரப்பான திருப்பம் ஏற்படுமா என அறிவாலயம் பதற்றத்துடன் இருக்கிறது.

கடைசி நாள்
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். அதனால் அதிமுகவோ, தேமுதிகவோ வேட்புமனுத்தாக்கல் செய்யுமோ என்ற பதற்றம் திமுகவில் இருந்தது.

நிம்மதி
ஆனால் இன்று வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துவிட்டது. தேமுதிகவும் அதிமுகவும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் திமுக இப்போது நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறது
-
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம் -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி?












Click it and Unblock the Notifications