‘இரட்டை இலை சின்னம் எங்களுக்கே’… தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்த டெல்லி விரைகிறார் ஓபிஎஸ்
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லி விரைகிறார்.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்த தேர்தல் ஆணையரை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நாளை சந்திக்கிறார்.
சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதற்கான நோட்டீஸ் சசிகலாவிற்கு அனுப்பப்பட்டு அதற்கான பதிலையும் தேர்தல் ஆணையம் பெற்றது.

இந்நிலையில், இதற்கான பதில் நோட்டீசை தேர்தல் ஆணையம் ஓபிஎஸ்ஸுக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை 61 பக்கத்தில் ஓபிஎஸ் அணியினர் இன்று தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நாளை ஓபிஎஸ் டெல்லி விரைகிறார். நாளை 12 மணியளவில் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை டெல்லி சென்று தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ள ஓபிஎஸ் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவிக்குமாறு வலியுறுத்த உள்ளார்.
மேலும், வரும் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை அவருடன் எம்பி மைத்ரேயன் உள்ளிட்ட ஓபிஎஸ் எம்பிகள் செல்லவிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications