அசல் ஓட்டுநர் உரிமம் விவகாரத்தில் தமிழக அரசு உறுதி.. ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
சென்னை: அசல் ஓட்டுநர் உரிமம் குறித்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து அடுத்த வெள்ளிக்கிழமைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாகனம் ஓட்டுவோர் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி, லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுகுறித்து இன்று, ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. மோட்டார் வாகனச் சட்டத்தில் ஏற்கனவே உள்ள விதிகள்தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழக்கு அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள பதிலை வைத்து பார்க்கும்போது, அசல் ஓட்டுநர் உரிமம் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications