பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்ற ஓவியா.. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார்?
பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஓவியா தனது நேர்மையான நடத்தையின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். 4 வாரங்களாக அவரை சக குடும்பத்தினர் எவிக்ஷனுக்கு நாமினேஷன் செய்தும் ரசிகள் அளித்த ஓட்டால் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து நீடிக்கும் வாய்பை பெற்றார்.
இதனால் பொறாமை கொண்ட காயத்ரி, ஜூலி உள்ளிட்ட சக போட்டியாளர்கள் அவரை ஒதுக்கி வைத்து மனதளவில் காயப்படுத்தினர். பிக்பாஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஓவியாவிடம் சக போட்டியாளரான ஆரவ் ஆறுதலாக பேச அவரை காலிக்க தொடங்கினார் ஓவியா.
|
தற்கொலைக்கு முயன்ற ஓவியா
ஆனால் ஓவியா மீது காதல் இல்லை வெறும் நட்புதான் என ஆரவ் கூறவே விரக்தியடைந்தார் ஓவியா. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் குதித்து ஓவியா தற்கொலைக்கு முயன்றார்.

ஓவியாவின் மேனேஜருக்கு தகவல்
இதையடுத்து அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுபடலாம் எனத் தெரிகிறது. காயத்ரியிடம் பேசிய பிக்பாஸ் ஓவியாவின் மேனேஜர் வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
இதனால் நாளைய எபிசோடில் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் எனத் தெரிகிறது. ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஓவியா இல்லாத பிக்பாஸ்
ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி பார்க்கப் போவதில்லை என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சக போட்டியாளர்களின் டார்ச்சரே ஓவியா வெளியேற காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications